தாலி கட்டும் நேரத்தில் சுயரூபத்தை காட்டிய மணப்பெண் - அதிர்ச்சியான மாப்பிள்ளை

மைசூரியில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டு சினிமா பாணியில் காதலனை மணமகள் கைகோர்த்த சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-24 03:22 GMT

https://www.youtube.com/watch?v=h9myFjjm1Ns&t=68sமைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மணமகளுக்கும் எஸ்.பி.கோட்டையை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. சரியாக தாலி கட்டும் நேரத்தில் திடீரென்று எழுந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மணப்பெண் முன்பே போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் திருமண மண்டபத்திற்கு வந்த போலீசார் மணப்பெண்ணை அழைத்து சென்றனர். மணப்பெண் பக்கத்து வீட்டு இளைஞரை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் அறிவுரைபடி திருமண நேரத்தில் அவர் திருமணத்தை நிறுத்தியது தெரிய வந்தது.

ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் திருமண நிகழ்ச்சிக்காக செலவு செய்த 5 லட்ச ரூபாயைக் கொடுக்குமாறு பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் திருமண மண்டபம் போர்களமாக காட்சி அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்