கார் - வாகனம் மோதல்; 2 பேர் பலி

கார் மீது வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

Update: 2022-06-04 15:49 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் இருந்து 4 பேர் ஹாசன் நோக்கி காலையில் புறப்பட்டனர். அவர்கள் துமகூரு அருகே குனிகல் தாலுகா பீகூர் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி ரோட்டின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு எதிர் ரோட்டுக்கு சென்றது.

பின்னர் எதிரே வந்த சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணித்து வந்த 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக குனிகல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்கள் யார் என்று தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்