சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-09-25 18:45 GMT

மும்பை, 

மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்த 25 வயது ஆட்டோ டிரைவர், கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக பெற்றோரிடம் கூறி அழைத்து சென்றார். இதன்பின்னர் சிறுமி வெகுநேரமாக வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பெற்றோர் பல இடங்களில் ேதடினர். இதற்கிடையில் ஆட்டோவில் அழைத்து சென்ற சிறுமியை கல்லறை தோட்டத்திற்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை கண்ட அங்கிருந்த காவலாளி சத்தம் போட்டு ஆட்டோ டிரைவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.

சிறப்பு கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின் போது அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்