விமான நிலையத்தில் ரூ.1.88 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் - பயணி கைது

சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1.88 கோடி மதிப்பிலான தங்கதுகள்கள் கடத்தி வந்த பயணியை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-10-15 19:30 GMT

மும்பை, 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 13-ந்தேதி இரவு விமானத்தில் வந்து இறங்கிய பயணி ஒருவர் கிரீன் சிக்னலை தாண்டி வேகமாக நடந்து சென்றார். இதனை கண்காணித்த சுங்கவரித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அப்பயணியை வழிமறித்தனர். அவர் வைத்திருந்த உடைமைகளில் சோதனை போட்டனர். இதில் எதுவும் சிக்காததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது, அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 கிலோ 720 கிராம் எடையுள்ள தங்கத்துகள்கள் அடங்கிய பார்சலை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 88 லட்சம் ஆகும். இதையடுத்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், தங்கம் கடத்தி வந்தவர் பெயர் அகமது கான் (வயது34) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் தங்கம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்