பேத்தியை பிச்சை எடுக்க வைத்த தாத்தா- பாட்டி மீது வழக்குப்பதிவு

பேத்தியை பிச்சை எடுக்க வைத்த தாத்தா, பாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-25 18:45 GMT

தானே, 

டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் மனைவி மற்றும் சிறுமி ஒருவளுடன் சுற்றிக்கொண்டு இருந்தார். இதில் சிறுமி பிச்சை எடுத்து கொண்டு இருந்தாள். எனவே சிறுமியை முதிய தம்பதி கடத்தி வந்து பிச்சை எடுக்க வைத்து இருக்கலாம் என பயணிகளுக்கு சந்தேகம் வந்தது.

இதுகுறித்து அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் முதிய தம்பதியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அகமதுநகர் மாவட்டம் பிட்கேவாடியை ேசர்ந்த நில்யா காலே (வயது82), அவரது மனைவி நஷிகா (72) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுடன் இருந்தது முதிய தம்பதியின் 7 வயது பேத்தி என்பதும், அவர்கள் சிறுமிைய கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பேத்தியை கட்டாயப்படுத்தி பிச்ைச எடுக்க வைத்த முதிய தம்பதி மீது வழக்குப்பதிவு செய்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்