2½ வயது குழந்தையை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்

புதுவையில் 2½ வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-10 18:21 GMT

புதுச்சேரி

2½ வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செல்போன் பேச்சு

புதுச்சேரி சுல்தான்பேட்டை முகமதியா நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ருக்சானா பேகம் (வயது 22). இத்தம்பதிக்கு ஹசானா திஸ்லிமா என்ற 2½ வயது மகள் உள்ளார். இந்த நிலையில் ருக்சானா பேகம் கடந்த சில நாட்களாக ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அதை கணவர் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சாகுல் ஹமீது அவரது மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் இரவு தூங்கினர். மறுநாள் காலை கண்விழித்து பார்த்த போது ருக்சானா பேகத்தை காணவில்லை. மாயமாகி விட்டார்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

இது குறித்து சாகுல் ஹமீது, வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ருக்சானா பேகம் செல்போனில் அதிக நேரம் பேசியதை, கணவர் கண்டித்ததால், தனது 2½ வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு, செல்போனில் பேசி பழகிய கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்