மது விற்ற 16 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-31 19:19 GMT

நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரை சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 105 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்