ராமநத்தத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

ராமநத்தத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-25 18:45 GMT

ராமநத்தம், 

திட்டக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மங்களூர் நோக்கி நேற்று மாலை டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை லக்கூர் கிராமத்தை சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் செந்தில் குமார் (வயது 43) என்பவர் ஓட்டி வந்தார். ராமநத்தம் சர்வீஸ் சாலையில் பஸ் நின்ற போது அங்கு வந்த ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் (24), இவருடைய நண்பர் அஜித் குமார் (26) ஆகியோர் செந்தில்குமாரை திடீரென ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர். இதில் காயமடைந்த செந்தில்குமார் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்