வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

கடையம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-12 19:00 GMT

கடையம்:

கடையம் அருகே மாலிக்நகர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜமால் அப்துல்காதர். இவருடைய மகன் ஷேக் மைதீன் (வயது 30). இவர் சம்பவத்தன்று சிவசைலம் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசைலம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (47), சம்பன்குளம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த அப்பாதுரை (41) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஷேக் மைதீனிடம் தகராறு செய்து, அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி, அப்பாதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்