ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ராதாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராதாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேனுடன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.