2 நாட்கள் மின் நிறுத்தம்

வேதாரண்யம் பகுதியில் 2 நாட்கள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-10-07 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மறை ஞாயநல்லூர், முதலியார் தோப்பு, நெய்விளக்கு, புஷ்கரணி,கோவில்தாவு, ஆதனூர், அண்டர்க்காடு பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதேபோல் பராமரிப்பு பணிகாரணமாக இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, மணியன்தீவு ஆகிய பகுதிகளில் 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்