முதியவரை தாக்கிய 2 பேர் கைது

முதியவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-15 19:00 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த மேலதிருவேங்கடநாதபுரம் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 70). இவர் நரசிங்கநல்லூர் சாஸ்தா கோவில் அருகே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் (51) மற்றும் ராஜ் (55) ஆகியோர் சேர்ந்து சுடலைமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவதூறாக பேசி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகப்பெருமாள், ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்