லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Update: 2023-10-01 22:07 GMT

ஈரோடு பஸ் நிலைய பகுதியில் டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த, ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 29), மாமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 219 லாட்டரி சீட்டுகள், ரூ.1,800 பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்