வடமதுரை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

வடமதுரை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-22 21:30 GMT

வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டி பகுதியில் வடமதுரை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கம்பிளியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற குடகிபட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 52), கூத்தம்பட்டியைச் சேர்ந்த செல்லையா (71) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரத்து 500 மற்றும் 70 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்