ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில், வெளி மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-09-27 21:42 GMT


ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில், வெளி மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

கஞ்சா கடத்தல்

மதுரை அரசரடி, ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் 1.11.2021-ல் மதுரை கரிமேடு போலீசார், புதுஜெயில் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 35 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் வந்தவர்களிடம் விசாரித்தனர்.

இதில் அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹரிகுமார் (வயது 33), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஈஸ்வரன் (42) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார்.

விசாரணை முடிவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்