சங்கராபுரம் அருகேசாராயம் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-22 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் நெடுமானூர், அரசம்பட்டு பகுதி கிராமங்களில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது நெடுமானூர் சுடுகாடு அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த, அதேஊரை சேர்ந்த குழந்தைவேல் (வயது 55) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த, அதேஊரை சேர்ந்த ராமர் (50) என்பவரையும் போலீசார் கைது செய்ததுடன், 120 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்