மது, சாராயம் விற்ற 2 பேர் கைது

ஆரணி அருகே மது, சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-21 09:31 GMT

ஆரணி

ஆரணி அருேக வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (வயது 40) என்பவர் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தார்.

இதேபோல ஆரணிடிய அடுத்த எஸ்.யு.வனம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (42) என்பவர் ஏரிக்கரைப் பகுதியில் சாராயம் விற்று கொண்டிருந்தார்.

அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்