சாராயம் விற்ற 2 பேர் கைது
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது;
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி, பாச்சேரி பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததாக மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை(வயது 38), பாச்சேரியை சேர்ந்த சக்தி(29) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 65 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.