அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

பேரளத்தில் இருந்து ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-03-11 18:45 GMT

நன்னிலம்:

பேரளத்தில் இருந்து ஓசூருக்கு 2 ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நன்னிலம், குடவாசல் பகுதிகளில் உள்ள அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலில் 42 வேகன்களில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் ஓசூருக்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்