அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-03-12 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 154 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் காஞ்சீபுரத்திற்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்