பருக்கல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி மகேஸ்வரி(வயது 50). இவரும், அதே ஊரை சேர்ந்த அறிவழகனின் மனைவி வேம்புவும்(42) அப்பகுதியில் மது பாட்டில்களை விற்றது போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மகேஸ்வரி, வேம்பு ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.