தடுப்புக்காவல் சட்டத்தில் 2 பெண் சாராய வியாபாரிகள் கைது

தடுப்பு காவல் சட்டத்தில் 2 பெண் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-22 00:15 IST

சாராய விற்பனை

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் மனைவி மச்சகாந்தி (வயது 35), சுரேஷ் மனைவி விஷ்ணுப்பிரியா (35). இவர்கள் இருவரும் அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாராய வழக்கில் அவர்கள் இருவரையும் அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் இதுபோன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார்.

தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

இதையடுத்து மச்சகாந்தி, விஷ்ணுப்பிரியா ஆகிய இருவரையும் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன்பேரில் மச்சகாந்தி, விஷ்ணுப்பிரியா ஆகிய இருவரையும் நேற்று தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், வேலூர் சிறையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்