தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்: தமிழ்நாடு, கேரள முதல் அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

Update: 2023-03-06 02:57 GMT

குமரி,

200 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1822-ம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை பெண்கள் தொடங்கினர்.

பின்னர் இந்த போராட்டம் தீவிரமடைந்து இந்த முறையை நீக்க காரணமாக அமைந்தது. இதனை நினைவுப்படுத்தும் விதமாக 200-வது ஆண்டு நிறைவு தோள்சீலை போராட்ட பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அவருடன் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்து கொண்டு பேசுகிறார்.

இரு மாநில முதல் அமைச்சர்கள் பங்கேற்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்