திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கண்ணியத்தை காக்கவேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-02-19 15:10 GMT
சென்னை,

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த போது அக்கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்தனர். இது குறித்து ஸ்டாலின் கூறுகையில்,

எம்எல்ஏக்களின் இந்த செயல் ஏற்கக்கூடியது அல்ல. அதனை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கண்ணியத்தை காக்கவேண்டும். என்று குறிப்பிட்டார். 

அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:

நம்பிக்கை தீர்மானத்தை இரண்டு முறை முதல்-அமைச்சர் முன் மொழிந்தார் இது சட்ட மீறலாகும். அதனால் அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது முறை அல்ல. எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்புக்கும் கூட மரியாதை தராமல் வாகனத்தை சோதனையிட்டனர். தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே மக்களின் குரல். சட்டமன்றத்தை ஜனநாயகம் இறந்த மன்றமாக்கிவிட்டார் சபாநாயகர். இது குறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்