கோட்டைக்காட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2017-03-03 16:50 GMT
சென்னை,

நெடுவாசல் அருகே கோட்டைக்காட்டில் ஹைட்ரோ-கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் கணேஷ் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்