தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்
இலங்கை சிறையில் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி முதல்-அமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 133 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.