அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கழிவுநீரை சுத்திகரிக்க கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா?
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திரவ மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கக்கோரி திருவான்மியூரை சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை,
இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் துணிகளை துவைக்கும்போது வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.