சசிகலாவைப் பதவியிலிருந்து நீக்கக் கூடுகிறது பொதுக்குழு - வைத்திலிங்கம் அறிவிப்பு!

சசிகலாவைப் பதவியிலிருந்து நீக்கக் கூடுகிறது பொதுக்குழு என வழிகாட்டு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அறிவிப்பு!

Update: 2017-08-21 11:02 GMT
சென்னை

அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து விட்டன. பன்னீர்செல்வம் அ.தி.மு.வின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல, அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா அந்தப் பதவியில் நீக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை முன்னிட்டு ஒரு அவசரப் பொதுக்குழு கூட உள்ளதாகவும், அந்தக் குழுவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி-யுமான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்