பல்லடம் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து: 4 பேர் பலி
திருப்பூரில் பல்லடம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூரில் பல்லடம் அருகே வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அதன் எதிரே வந்த லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் கார்த்திக், அஜ்மீர், சரவணன், மாணிக்கராஜ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.