பல்லடம் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து: 4 பேர் பலி

திருப்பூரில் பல்லடம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2017-12-19 02:08 GMT

திருப்பூர்,

திருப்பூரில் பல்லடம் அருகே வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது.  அதன் எதிரே வந்த லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் கார்த்திக், அஜ்மீர், சரவணன், மாணிக்கராஜ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்