ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-12-22 15:11 GMT
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஆணையம் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 16 பேர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

அடுத்தகட்டமாக சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப்ரெட்டி, துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப ஆணையம் முடிவு செய்தது. அதன்படி அவர்களுக்கு சம்மன் நேற்று தயாரானது.

சசிகலா, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.15 நாளில் பதிலளிக்குமாறு சசிகலாவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் பிரீத்தா ரெட்டி 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

விசாரணை ஆணையத்தின் காலஅவகாசம் 25-ந் தேதியுடன்  முடிவடைகிறது. எனவே காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு ஏற்கனவே ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

இந்நிலையில்  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 6 மாதம் விசாரணை நடத்தலாம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்