12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு

12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #TNGovernment

Update: 2018-02-22 15:02 GMT
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* எஸ்பிக்கள் டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், ஏ.ஜி.பாபு, செந்தில் குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, அசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெய கௌரி மற்றும் காமினி ஆகியோர் டிஐஜிகளாக பதவி உயர்வு.

* கடலோர காவல்படை டிஐஜியாக பவானீஸ்வரி, விழுப்புரம் சரக டிஐஜியாக சந்தோஷ் குமார், கோவை சரக டிஐஜியாக கார்த்திகேயன், திண்டுக்கல் சரக டிஐஜியாக ஜோஷி நிர்மல்குமார் பணியிட மாற்றம்.

* சென்னை பெருநகர கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக அன்பு, சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஐஜியாக பாஸ்கரன் நியமனம்.

மேலும் செய்திகள்