விஞ்ஞானிகள் அதிகம் உருவாவதற்கு தற்போதைய பாடத்திட்டமே போதுமானது - இஸ்ரோ தலைவர் சிவன்

விஞ்ஞானிகள் அதிகம் உருவாவதற்கு தற்போதைய பாடத்திட்டமே போதுமானது என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி! #ISRO #Sivan

Update: 2018-03-23 07:16 GMT

இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:-

அறிவியல் விஞ்ஞானிகள் அதிகமாக தேவைப்படுகிறார்கள்; அவர்களை உருவாக்க தற்போதைய பாடத்திட்டம் போதும் மீனவர்களுக்கான மொபைல் செயலி ஏப்ரலில் மீனவர்களுக்கு வழங்கப்படும். சந்திராயன் 2 விண்கலம் ஏப்ரலுக்கு பதில் அக்டோபரில் தான் விண்ணில் செலுத்தப்படும். அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதில் தாமதம்

ஜிஎஸ்எல்வி ஜி-சாட் வரும் 29 தேதியும்,ஐஆர்என்எஸ் செயற்கைக்கோள் ஏப்ரலிலும் ஏவப்படும். சந்திராயன்-2 விண்கலம் ஏப்ரலுக்கு பதில், அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படும்  என கூறினார்.

மேலும் செய்திகள்