காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்து - மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin

Update: 2018-04-19 07:43 GMT
சென்னை

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;-

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க, சட்டமன்றத்தில் தொடர்ந்து திமுக வலியுறுத்தியது.  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்துக்களை கூறிவருகிறார்.  மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் தொடர்ந்து செயல்படுகிறார், ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக தொடர்ந்து போராடும்.

நிர்மலா தேவி விவகாரத்தில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை தேவை .என கூறினார்.

மேலும் செய்திகள்