குண்டர்சட்ட கைதியை தவறுதலாக விடுதலை செய்த சிறைக் காவலர் பணியிடை நீக்கம்

புழல் சிறையில் குண்டர்சட்ட கைதியை தவறுதலாக விடுதலை செய்த விவகாரத்தில் விசாரணை பிரிவு சிறைக் காவலர் பிரதீப்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

Update: 2018-05-17 10:39 GMT
சென்னை

புழல் சிறையில் சிறைக்காவலர் பிரதீப் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  தண்டையார்பேட்டையை சேர்ந்த ரவி என்ற கைதிக்கு குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்ட  ஆணையை, விடுதலை ஆணை என கருதி காவலர் பிரதீப் விடுவித்ததாக காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

மேலும் செய்திகள்