விநாயகரை விமர்சித்த வழக்கில் பாரதிராஜாவுக்கு முன்ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில், நாராயணன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் ஒரு புகார் கொடுத்தார்.

Update: 2018-05-23 20:54 GMT
சென்னை, 

சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில், நாராயணன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘சென்னையில் கடந்த ஜனவரி 18-ந்தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்தார். ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.

இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாரதிராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பாரதிராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பாரதிராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்