எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - தமிழக அரசு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-06-04 06:37 GMT
சென்னை:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தின

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய  முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்