டி.வி.நடிகை நிலானி, புழல் சிறையில் அடைப்பு
டி.வி.நடிகை நிலானி, புழல் சிறையில் அடைப்பு
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த டி.வி. நடிகை நிலானி, போலீஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த நிலானியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குன்னூரில் இருந்த நிலானியை போலீசார் கைது செய்தனர். குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை நேற்று சென்னை வடபழனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
பின்னர் நிலானியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
நிலானியை ஜூலை மாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நடிகை நிலானியை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.