சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல இடங்களில் நல்ல மழை பெய்கிறது.

Update: 2018-08-14 13:25 GMT


சென்னை வானிலை ஆய்வு மையம் முன் அறிவிப்பின் போது, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வானம் மேக மூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். மீனவர்கள் வட மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மத்திய பகுதிக்கும், அந்தமான் பகுதிகளுக்கும் அடுத்த 2 நாட்களுக்கு போகவேண்டாம் என எச்சரிக்கையை விடுத்தது. 

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், சென்டரல், புரசைவாக்கம், தேனாம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அலுவலகம் விட்டு சென்ற வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி செல்கிறார்கள். 

மேலும் செய்திகள்