கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு வந்துள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு வந்துள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-23 16:16 GMT
சென்னை,

அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பதாவது:

எம்எல்ஏ-வாக இருந்து கொண்டு, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் விதமாக பேசியதால் தான், கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு வந்துள்ளது. ஹெச்.ராஜா எம்எல்ஏ கிடையாது என்பதால் அவரது பேச்சுக்கள் மக்களிடம் பிரதிபலிக்காது.  ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியது தான், இதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்