பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது - தம்பிதுரை
பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
சென்னை,
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:
திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க முயல்கிறார்கள், பாஜகவுடன் மறைமுக தொடர்பில் உள்ளனர். பேச்சு, எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள திமுக மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.