20 தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுகவில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில் அதிமுகவில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல் அமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
உட்கட்சி விவகாரம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம், நாடாளுமன்ற தேர்தல், நிர்வாகிகள் நியமனம், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடந்ததாக கூறப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில் அதிமுகவில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ளனர்.
திருப்பரங்குன்றம்- அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்பட 7 பேர் பொறுபாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் கீழ்கண்டவாறு கழக பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
— AIADMK (@AIADMKOfficial) October 29, 2018
— AIADMK (@AIADMKOfficial) October 29, 2018
— AIADMK (@AIADMKOfficial) October 29, 2018