விவசாயிகளின் வலியை பிரதமர் உணர்ந்து நீண்டகால தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

விவசாயிகளின் வலியை பிரதமர் உணர்ந்து நீண்டகால தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Update: 2018-11-30 14:04 GMT
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடைபெறுகிறது. 

விவசாயிகளின் வலியை பிரதமர் உணர்ந்து நீண்டகால தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும். தமிழக விவசாயிகளும் இதே பிரச்னைகளைத்தான் சந்திக்கிறார்கள். டெல்லி சென்று விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளே காரணம்.

 நிர்வாண போராட்டங்களை கைவிட்டு நாகரீகமாக அற வழியில் போராட விவசாயிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்