ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அமமுகவினர் மரியாதை

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2018-12-05 08:49 GMT
சென்னை,

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது.

திறந்த ஜீப்பில் தினகரன் தலைமையில் அமைதி ஊர்வலம் மெரீனா கடற்கரை நோக்கி புறப்பட்டது. ஜீப்பில் தினகரனுடன் நிர்வாகிகள் அன்பழகன், பழனியப்பன், பி.வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தமிழன் ஆகியோர் சென்றனர்.

அமைதி பேரணி மெரீனாவில் நிறைவடைந்ததும், தொண்டர்களுடன் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகள்