தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வரமாட்டார்- திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனால் ஒரு போதும் வர முடியாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Update: 2018-12-08 07:24 GMT
சென்னை,

சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  மாற்றம் பற்றி  முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஒரு போதும் வெளிப்படையாக பேசுவதில்லை.

ஆனால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மட்டும் பதவி மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இளங்கோவன் தன்னை மட்டும் திட்டவில்லை, ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், தங்கபாலு, செல்லக்குமார் உள்ளிட்ட பிற தலைவர்களையும் திட்டி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும், ஆனால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என கூறினார்.

மேலும் செய்திகள்