தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் - திருமாவளவன்

தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என்பது உறுதி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-13 16:06 GMT
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:

தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என்பது உறுதி. தோல்வி அடைந்தே தீருவோம் என்ற முயற்சியோடு வேலை செய்தால் அதி வெற்றிகரமான தோல்வி.ஜன.3 விசிகவின் தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் நடைபெறும்.  

விஏஓக்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விஏஓக்கள் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள முடியாது. மேகதாது விவகாரத்தில், தேர்தல் ஆதாயத்திற்காக செயல்படும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். இலங்கையில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில், அந்நாட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்