அரசு நிலம் ஆக்கிரமிப்பு; லஞ்சம் பெற்று பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-12-18 12:18 GMT
சென்னை,

சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 பேர் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என கூறப்படும் இடங்களுக்கு தங்களிடம் பட்டா உள்ளது என்றும் அதனால் தங்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிட கூடாது என கோரியிருந்தனர்.

இதுபற்றிய வழக்கு விசாரணையில், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுபற்றி 4 வாரங்களுக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உள்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து அவர், நீர்நிலைகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து அரசு கடமை தவறி விட்டது.  இதுபோன்று லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்