தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்பட்டு ஆட்சியை குறை கூறுகின்றனர்; அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்பட்டு ஆட்சியை குறைகூறி வருகின்றனர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Update: 2018-12-24 16:14 GMT
சென்னை,

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்பொழுது, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்பட்டு ஆட்சியை குறைகூறி வருகின்றனர்.  அண்ணா வழியில் வந்தவர்கள் அண்ணாவின் கொள்கையை மறந்து விட்டனர் என கூறியுள்ளார்.

அதன்பின் அவர், தமிழகத்தில் கேபிள் கட்டணம் உயர்வதற்கு வாய்ப்பே இல்லை.  டிராய் நிறுவனத்தின் கட்டணத்துக்கு மத்திய அரசிடம் முறையிட்டு தற்போதைய கட்டணத்தையே தொடர்வோம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்