தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

Update: 2018-12-30 01:59 GMT
ராமநாதபுரம்,

ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.  இந்த நிலையில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதனால் 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்து உள்ளன.  இதனை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.  அவர்கள் தமிழக மீனவர்களை எச்சரித்து விரட்டினர்.  இதனை தொடர்ந்து மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்