தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும் - சரத்குமார்

தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

Update: 2019-01-12 14:01 GMT
சென்னை,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது:

கோடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் தன் மீது குற்றமல்ல என தெரிவித்து உள்ளார்.  கோடநாடு விவகார வழக்கை விசாரிக்க தனிப்பட்ட கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். 

தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும். நான் சட்டமன்றத்தை நோக்கி தான் பயணித்து வருகிறேன். ஆட்சி மன்ற குழு தீர்மானித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்