துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 5 நாள் பயணமாக சென்னை வந்தார்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 5 நாள் பயணமாக சென்னை வந்தார்

Update: 2019-01-13 15:25 GMT
ஆலந்தூர், 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 5 நாள் பயணமாக   மாலை ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவரை, கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், பென்ஜமின் மற்றும் உயர் அதிகாரிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்